ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.அந்த அறுபத்துநான்கு கலைகள் என்னென்ன என்பதைத்தெரிந்தவர்கள் மிகக் குறைவே. என் நண்பர் இந்திராசெளந்தர்ராஜன் அவர்களிடம் ஒருமுறை கேட்டபோது அந்தஅறுபத்து நான்கு கலைகளையும் பட்டியலிட்டுச் சொன்னார்.பிரமிப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்காக அவற்றை இங்கேதருகிறேன்.
1. முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3.கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8.தர்ம சாஸ்திரம், 9. யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,
...
11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14. வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப்பிரம்மம், 17. காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20.கூத்து,
21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24.மிருதங்க இசை, 25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப்பரீட்சை, 28. கனகப் பரீட்சை (தங்கம் எது என அறிதல்), 29.யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை ஏற்றமும் ஜாதிஅறிதலும்,
31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம்மற்றும் தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36.உச்சாடனம், 37. பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39.மோகனம், 40. ஆகர்ஷணம்,
41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44.துயர் மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும்சாஸ்திரம், 47. களவு, 48. மறைந்துரைதல், 49. ஆகாயப்பிரவேசம், 50. விண் நடமாட்டம்,
51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திரஜாலம், 54. மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜலஸ்தம்பனம், 57. வாயு ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59.வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில ஸ்தம்பனம், 61. சுன்னஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக்கட்டுப்படுத்துதல், 64. இசை.
No comments:
Post a Comment